மோடிக்கு ஆதரவு

தமிழகம், புதுவை, அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேதல் நடந்து புதிய அரசு பதவியற்றது முதல் அவர்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது குறித்து, ஐ.ஏ.என்.எஸ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மாநில முதல்வர்களில் விரும்பப்படும், சிறப்பாக செயல்படும் முதல்வராக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலிடத்தில் உள்ளார். அவரையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உள்ளனர். இதைத்தவிர பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துக்கணிப்பில், 44.77 சதவீத மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பணியால் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பில், ராகுல் காந்தி 11 சதவீதத்துடனும் அரவிந்த் கெஜ்ரிவால் 12 சதவீதத்துடனும் பிரதமர் மோடியின் அருகில் நெருங்ககூட முடியாத தொலைவில் உள்ளனர். வருங்கால பிரதமர் கனவில் மிதக்கும் சிலர் இந்த லிஸ்டிலேயே இல்லை. மேலும், 45.92 சதவீதம் பேர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பணியால் திருப்தி அடையவில்லை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என 44.44 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.