பொன்முடி கல்லூரியில் தற்கொலை முயற்சி

விழுப்புரம் அருகேயுள்ள உள்ள விக்கிரவாண்டியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் விழுப்புரம் கே.கே ரோடு மணி நகர் பகுதியை சார்ந்த ரம்யா என்ற மாணவி இளங்கலை மருந்தகவியல் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவி திடீரென கல்லூரியின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனையடுத்து கல்லூரியில் இருந்தவர்கள் மாணவியை உடனடியாக மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். இது தற்கொலை முயற்சியா, விபத்தா, அல்லது கல்லூரியில் ஏதேனும் பாலியல் தொந்தரவு நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.