மாணவர் தற்கொலை முயற்சி

கர்நாடகாவின் மடிகேரி குஷால்நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் பிரஜ்வால்  என்ற மாணவர், தனது கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்தார். இதனால் எரிச்சலடைந்த, அக்கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சில முஸ்லிம் மாணவர்கள் பிரஜ்வாலை கடுமையாகத் தாக்கினர். இதுகுறித்த பிரஜ்வால் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தார். ஆனால், அவரிடம் இருந்து பிரஜ்வாலுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இதனையடுத்து மனமுடைந்த அம்மாணவர் தற்கொலைக்கு முயன்றார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கல்லூரி வார்டனுக்கு எதிராக ஏற்கனவே மதப் பாகுபாடு மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த ஹிந்து அமைப்பினர் இது தொடர்பாக குஷால்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.