மதம் மாற மறுத்த மாணவி உயிரிழப்பு

அரியலூரில் மதம் மாற மறுத்த மாணவி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டிய கிறிஸ்தவ பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஆனால், தவறு செய்த கிறிஸ்தவ நிர்வாகத்தை கைது செய்யாத காவல்துறை, நியாயத்திற்காக போராடிய வி.ஹெச்.பியினரை மட்டும் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தது. மதமாற்றத்திற்கு துணைபோகும் தமிழக அரசை வி.ஹெச்.பி வன்மையாக கண்டிப்பதாக இப்போராடத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனிடையே மதம் மாற மறுத்து அந்த அப்பாவி மாணவி லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.