ஹிந்து அமைப்புகள் போராட்டம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி‌ ரவி மீது நேற்று முன்தினம் கொலை வெறித் தாக்குதல் நடைபெற்றது. அவரின் தலை உட்பட நான்கு இடங்களில் வெட்டப்பட்டு உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது முஸ்லிம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக அவருக்கு சொந்தமான தோப்பில் மாட்டுக் கறி கழிவுகளை அப்துல் ரசாக் என்பவர் கொட்டியதை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூர செயலைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கம்பத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.