கோயில்கள் முன்பாக போராட்டம்

அனைத்து நாட்களிலும் கோயில்களுக்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக பா.ஜ.க தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் புகழ்பெற்ற கோயில்கள் முன்பாக இன்று போராட்டம் நடத்த உள்ளனர். தொடர்ந்து பலமுறை இக்கருத்தை வலியுறுத்தியும், இரு செவியும் மந்தமாய், கேளாத அந்தமாய் தி.மு.க அரசு உள்ளது. இதனால், இந்த அறப்போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தமிழகத்தின் 12 புகழ்பெற்ற கோயில்கள் முன்பாக மக்களுக்கான இந்த போராட்டம் நடக்கும். அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.