நேதாஜிக்கு சிலை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்த அவரது செய்தியில், ‘ஒட்டுமொத்த தேசமும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்டமான கிரானைட் கற்களால் ஆன சிலை அமைக்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நேதாஜிக்கு பாரதம் செலுத்தும் நன்றிக் கடனாகும். நேதாஜிக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கும் பணி நிறைவடையும். மின் ஒளி வடிவிலான சிலையை நாளை மறுதினம் திறந்துவைக்க உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். கூறியுள்ளர்.