சுவாமி சிலைகள் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, சுப்ரமணிய சுவாமி கோயிலில், சாலை அமைக்கப்பட்டு வழியெங்கும் முருகன், சிவன், பார்வதி போன்ற சுவாமி சிலைகள் மான், புலி, மயில் போன்ற விலங்குகளின் சிமென்ட் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா தொற்று காரணமாக கோயில் மூடப்பட்டுள்ள சூழலில், இரவோடு இரவாக மலைப் பாதையில் இருந்த சிவன், பார்வதி, முருகன் சிலைகளை சில சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல ஹிந்து அமைப்புகளும் இதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளன.