மக்களை குழப்புபவர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரையை ஆதரித்து பணகுடியில் பேசுகையில், தி.மு.க வாரிசு அரசியல் கட்சி. மக்களுக்கு ஆதரவான கட்சி அ.தி.மு.க ஆட்சியில், விவசாயம் வேளாண்மையில் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. அ.தி.மு.க தமிழகத்துக்கு எதுவுமே செய்யவில்லை என கூறும் ஸ்டாலின் என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? ஆனால் அவர் வர மாட்டார். தேர்தல் நேரத்தில், தி.மு.க காங்கிரஸ் இணைந்து ஓட்டுக்காக பொய்களை பரப்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் மக்களிடம் சூழ்ச்சி செய்கிறார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க  அவர்கள் ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். பொது மக்கள் இவர்களின் பொய் செய்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவித்தார்.