வி.சி.கவின் சிறுமை எண்ணம்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள் அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கரின் 66வது நினைவு நாளையொட்டி நேற்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் கருப்பு எம். முருகானந்தம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் பா.ஜ.கவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்கா. ரவி தலைமையிலான கும்பல், பா.ஜ.கவினர் இந்த சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது. அம்பேத்கர் சிலையை சுற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நின்று கொண்டு மாலை போட விடாமல் தடுத்து, பா.ஜ.கவினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்லமாட்டோம் எனக் கூறி பா.ஜ.கவினரும் அம்பேத்கர் சிலை அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.