டயர் கடையான சிவன் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் மூங்கில் மண்டபம் அருகில் வள்ளல் பச்சையப்பா சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான சிவன் கோயில் ஒன்று, பழைய டயர் கடையாக மாற்றப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அக்கோயிலுக்குச் சென்று பார்வையிட்டனர். இதனை ஆக்கிரமித்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இச்செய்தியை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இக்கோயிலை மீட்டு, புதுப்பித்து மக்கள் வழிபட ஏற்றதாக மாற்றும்படி ஹிந்து அமைப்புகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.