ராஷ்டிரீய சேவிகா சமிதியின் சேவை

சாதாரணமாக சுடுகாட்டு பக்கம் செல்லவே ஆண்களே பலரும் தயங்குவது சகஜம். கொரோனா நோயாளி என கேள்விபட்டாலே நமக்கு அது தொற்றிக்கொள்ளுமோ என மிரள்வதும் நாம் காணக்கூடியதே. இந்த நிலையில், குஜராத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிரீய சேவிகா சமிதியை சேர்ந்த பெண்கள், கொரோனா பெரும் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் சேவைகளை செய்து வருகின்றனர். தாய் சக்தியின் வடிவமாகவே இவர்கள் நம் கண்ணுக்கு தெரிகின்றனர்.