அனுமன் ஜெயந்தியில் மதவெறியர்கள் கலவரம்

ஏப்ரல் 16 அன்று உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் ஹனுமன் ஜெயந்தி ஷோபா யாத்திரை நடைபெற்றது. தாதாபட்டி கிராமத்தின் வழியாக சென்றது. அப்போது, ஊர்வலத்தில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது முஸ்லிம் மதவெறியாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் போலீசார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டதும், சில நாட்களுக்கு முன் ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் மீது குஜராத், மத்தியப் பிரதேசம் என பல்வேறு இடங்களில் முஸ்லிம் மத வெறியர்களால் இதேபோல கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.