ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் இஸ்ரேல் தூதுவர்

நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவில் சிறப்பு அழைப்பாளராக, பாரதத்திற்கான மும்பை அலுவலகத்தின் இஸ்ரேல் தூதர் கோபி ஷோஷானி பங்கேற்றார். அவருடன், மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர். ஆண்டு தோறும் சுமார் 1,000 ஸ்வயம்சேவகர்கள் சங்க சீருடை அணிந்து இவ்விழாவில் பங்கேற்பர். நாடெங்கிலும் இருந்து பல துறைகளை சார்ந்த பல்வேறு பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்பது வழக்கம். ஆனால்,  கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஸ்வயம்சேவகர்கள் மட்டுமே இவ்வருட விழாவில் அனுமதிக்கப்பட்டனர்.