ரூ.11 கோடி அரசு நிலம் மீட்பு

பல்லாவரம் தாலுகா, பரங்கிமலை கிராமம், பட்ரோடு சந்திப்பில் உள்ள 35 சென்ட் அரசு நிலம், நீண்ட நாள் அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை ஒப்பந்தம் முடிந்தும் பலரது கை மாறிவந்தது. இதனால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இடத்தை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று 11 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை மீட்டனர். அதில் கட்டப்பட்டிருந்த கட்டடம் இடிக்கப்பட்டது. அந்த இடத்தை, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது.