காஷ்மீர் பண்டிட் பெயரில் சாலை

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் காஷ்மீர் பண்டிட்டும் பிந்த்ரு மெடிகேட்டின் உரிமையாளருமான எம். எல் பிந்த்ரு, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்,  வருத்தம் தெரிவித்த ஸ்ரீநகர் முன்சிபல் கார்ப்பரேஷன் மேயர் ஜுவானிட் மேட்டூ, ‘எம். எல் பிந்த்ருவின் பிந்த்ரு மெடிகேட் அமைந்துள்ள ஹஃப்ட் சினார் சௌக் முதல் ஜஹாங்கீர் சௌக் வரையிலான சாலை, சமூகத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஷாஹீத் மகான் லால் பிந்த்ரு சாலை என்று பெயரிடப்படும். எஸ்.எம்.சி பொது கௌன்சிலில் இதற்கான தீர்மானம் முன்மொழியப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.