ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. தற்போதுள்ள 4 சதவீத வட்டி விகிதமே தொடரும். ரிவர்ஸ் ரெப்போவும் 3.35 சதவிகிதமாக தொடரும். கொரோனா 2வது அலையின் தாக்கத்தில் இருந்து பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. 2021 – 2022ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு செயல்படுத்தப்படுகிறது. வரும் 2022 – 23 முதல் காலாண்டு பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.