பி.எப்.ஐ தடைவிதிக்க கோரிக்கை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மீது முழுமையான தடையை உடனடியாக விதிக்குமாறு அசாம் அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது என்று கருத்துத் தெரிவித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘ஹிஜாப் பிரச்சனையின் பின்னணியில் பி.எப்.ஐ உள்ளது என்ற நிலைப்பாட்டின் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்படவில்லை. மாறாக, ‘நாசகார நடவடிக்கைகள் மற்றும் தீவிரமயமாக்கலில்’ அவர்களின் நேரடி ஈடுபாட்டிற்காகவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.