குண்டர் சட்டம் ரத்து

பா.ஜ.க ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர் கே.சாமி,பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இணையதளத்தில் அவதுாறு கருத்துகளை பரப்பினார், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தார் என்ற புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்கள் கிஷோர் கே.சாமியை, மூன்று வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்துள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.