மருத்துவமனை மீண்டும் திறப்பு

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் 120 வருடம் பழமையான மருத்துவமனை, 20 வருடங்களாக செயல்படாமல் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த மருத்துவமனையை சுத்தம் செய்து புதுப்பித்துள்ளனர் கோலார் நகர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். 800 படுக்கை வசதிகளுடன் அந்த மருத்துவமனை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. இது போல் நாடெங்கிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தொற்றுநோய் சிகிச்சை தனிமைப் படுத்தும் மையங்களை ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி அமைப்பினர் செய்துள்ளனர்.