வாடகை நிலுவை வசூல்

தமிழகம் முழுதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் குத்தகை, வாடகை தொகை, பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், நிலுவை தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். செலுத்தாதவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை எச்சரித்து உள்ளது. குத்தகை, வாடகை நிலுவை தொகைகளை உடனடியாக வசூலிக்க கோயில் நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபர்கள், தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். நிலுவை தொகையை முறையாக செலுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அறநிலையத்துறை கூறியுள்ளது.