மத அடையாளச் சின்னம் நீக்கம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில், சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் மத அடையாள சின்னம் குறித்த புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பரவியது. இதற்கு சமூக ஊடகப் பயனாளிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பு, சட்டத்தை மீறி அரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மத அடையாளச் சின்னத்தை நீக்க வலியுறுத்தியது. நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் மத அடையாளச் சின்னம் இரண்டு மணி நேரத்தில் அகற்றப்பட்டது.