ஆதிபராசக்தி மன்றங்கள் நிவாரண உதவி

உலகம் முழுவதும் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றங்கள் சார்பாக, 270 நாட்களில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், அன்னதானம், மருத்துவப் பொருட்கள், அரிசி, மளிகைப் பொருட்கள், சானிடைசர்கள், முகக்கவசங்கள் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. அரசுத் துறையுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உணவு வழங்குதல், துப்புரவு பணியாளர்கள், பார்வையற்றோர், திருநங்கைகள், சாலை ஓரம் வாழும் ஆதரவற்றவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள், கால் நடைகளுக்கு உணவு என பல்வேறு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.