ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது ‘மோடி’ என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கூறி பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கி பேசினார். இதனையடுத்து, ராகுல் மீது குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணை வழங்கப்பட்டுள்ளது.