ராகுல் அலைபேசியை ஒப்படைப்பாரா?

தனது அலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக தொடர்ந்து புகார் கூறிவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது அலைபேசியை விசாரணைக்காக விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் சட்டப்படி, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நாட்டின் வளர்ச்சியை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குகிறது’ என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் ராத்தோர் கூறியுள்ளார்.