நைட் கிளப்பில் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு நைட் கிளப் ஒன்றில் பார்ட்டியில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பா.ஜ.க தேசிய தகவல் தொழிநுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில், “மும்பை தாக்குதலின் போது, ராகுல், இரவு விடுதியில் இருந்தார். காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கும் சமயத்தில் அதன் முக்கிய தலைவர் ராகுல், வெளிநாட்டு பார்ட்டியில் பங்கேற்றிருக்கிறார். எந்த சமயத்திலும் அவர் சீராகவே இருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்காத சூழலில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார். ராகுலின் வெளிநாட்டு பயணம் குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேபாளத்திற்கு தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி சென்றுள்ளார்” என கூறியுள்ளது. ஆனால், திருமண நிகழ்ச்சிக்கு சென்றவருக்கு நைட் கிளப்பில் என்ன வேலை, உடனிருக்கும் பெண்மணி யார் என்பதை மட்டும் கடைசிவரை சொல்லவில்லை.