குரேஷியின் இப்படி கூறலாமா?

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி எழுதியுள்ள புதிய புத்தகம், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், ‘முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பொய்க் கதைகள், தகவல்கள் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகின்றன. பாரதத்தை முஸ்லிம் நாடாக்கும் வகையில், தங்கள் மக்கள் தொகையை, முஸ்லிம்கள் அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றனர். மக்கள் தொகையை உயர்த்துவதற்காக, பலதார முறையை, முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகின்றனர். இந்த பொய் பிரசாரம் நீண்டகாலமாக நடந்து வருகிறது என உண்மையை மறைத்துக் கூறி தன் மத விஸ்வாசத்தை பறைசாற்றியுள்ளார். ஆனால் அவர் கடந்த 70 ஆண்டுகளில் ஹிந்துக்களின் மக்கள் தொகை, 84.1 சதவீதத்தில் இருந்து 79.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்ற உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார்.