எந்த மொழியிலும் பூஜை செய்யலாம்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் நடந்த, தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய மதுரை ஆதீனம், “கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என ஒரு கூட்டம் கூறுகிறது. இன்னொரு கூட்டம், செய்யக் கூடாது என்று கூறுகிறது. சமஸ்கிருதம், தமிழ் என எதிலும் பூஜைகள் செய்யலாம். அந்தந்த மொழிகளில் பூஜை செய்பவர்கள் செய்யட்டும். ஆனால், தமிழில் பூஜை செய்வதை தடுக்க கூடாது. தமிழ், தமிழ் என்பவர்களின் வீடுகளில் கூட தமிழில் பூஜைகள் நடப்பதில்லை. பெண்மையை போற்ற வேண்டும். மொழி உணர்வுடன் வாழ வேண்டும்” என்று கூறினார்.