பலிதானிகளுக்கு தர்பணம்

அமாவாசைக்கு முதல் நாளான பதினான்காவது நாள் மிகவும் முக்கியமான தினம். இந்நாளை ஸஸ்தரஹத மாஹளய தர்ப்பணம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நாளில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரழந்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கப்படுவது அவர்களின் ஆன்மாவுக்கு மேலும் உயர்வை கொடுக்கும். இவ்வருடம் அந்த 14வது நாள் கடந்த 05/0/2021 அன்று வந்தது. இந்நாளில் விஷ்வ ஹிந்து பரிஷத் – தென்தமிழகம் சார்பாக திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபத்தில் வி.ஹெச்‌‌.பி யின் மாநில அமைப்புச் செயலாளர் தலைமையில், ஆயுதங்களால் தாக்கப்பட்டு தேசத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கும், முஸ்லிம், கிறிஸ்தவ பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு பலிதானமானவர்களுக்கும், அயோத்யாவில் பலிதானமான கரசேவகர்களுக்கும் தரப்பணம் கொடுக்கப்பட்டது. இதில் மற்றொரு விஷேஷமாக, முஸ்லிம் மதத்திலிருந்து ஹிந்துவாக தாய் மதம் திரும்ப வந்த ஒரு சகோதரியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஸஸ்ரகத தர்ப்பணத்தை செய்தார்.