விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து

தேசிய அறிவியல் தினத்தன்று, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் செய்தியில், “அனைத்து விஞ்ஞானிகளுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள். நமது கூட்டான அறிவியல் பொறுப்புத் தன்மையை நிறைவேற்றவும், மனிதகுல வளர்ச்சிக்கான அறிவியலின் ஆற்றலை மேம்படுத்தவும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், முன்னாள் பிரதமர் மொரார்ஜிபாய் தேசாய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தேசத்தின் கட்டுமானத்தில் தேசாயின் சிறப்புமிக்க பங்களிப்பு, பாரதத்தை வளமுடையதாக மாற்றும் அவரது முயற்சிகள், பொது வாழ்க்கையில் நேர்மை போன்றவற்றை நினைவு கூர்தார்.