பூஜாரிகள் பயிற்சி முகாம்

விஷ்வ ஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில், மாவட்ட வாரியாக 2நாட்கள் பூஜாரிகள் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதிகமான பட்டியல் இன பூஜாரிகள் ஆர்வத்துடன் இந்த முகாம்களில் பங்கேற்றனர். பிள்ளையார் பட்டி பிச்சை குருக்களின் குருகுல ஆசிரியர் இந்திரமார் ஆகம விதிகள் மற்றும் பூஜா முறைகளுக்கான பயிற்சிகளை அளித்தார். வி.ஹெச்.பி வடதமிழக பூஜாரிகள் அமைப்பாளர் அம்மணியம்மன் ரமேஷ் தலைமையில் ஏற்பாட்டுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. கடலூர் மாவட்டத்தில் 100 பூஜாரிகளும் விழுப்புரம் மாவட்டத்தில் 117 பூஜாரிகளும் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சிகளை தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. வி.ஹெச்.பி அமைப்பின் அகில பாரத இணைச் செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர், மாநில இணைச் செயலாளர், ஆர்.எஸ்.எஸ் சாமாஜிக் சமரசதா ப்ரமுக் உள்ளிட்ட பல்வேறு அமைப்பாளர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.