கொரோனா விதிமீறலில் பாதிரிகள்

கேரளா, மூணாறில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சர்ச் ஆஃப் சௌத் இந்தியா (சி.எஸ்.ஐ) சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பாதிரிகள் கலந்துகொண்டனர். அதில் 100 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் இறந்துவிட்டனர். ஐந்து பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். அவ்விழாவில் கலந்துகொண்ட பாதிரிகள் யாரும் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. கொரோனா கட்டுப்பாடு, விதிமுறைகளை மீறி நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற பாதிரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.