பாதிரிக்கு 18 ஆண்டு சிறை

கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில், சென்னையைச் சேர்ந்த பாதிரி தாமஸ் பரேக்குளம் ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2017ல் இப்பள்ளியில் பயின்ற 16 வயதுக்கு உட்பட்ட நான்கு சிறுவர்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. தலைமறைவாக இருந்த பாதிரி சென்னையில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த கொல்லம் போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவர் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று சிறுவர்கள் மீதான வழக்குகளில் தலா ஐந்து ஆண்டு, ஒரு சிறுவன் வழக்கில் மூன்றாண்டு தண்டனை என 18 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் நான்கு சிறுவர்களுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.