போக்சோவில் பாதிரி கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரைட்டான்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு வீடு தோறும் சென்று ஜெபக் கூட்டங்களை நடத்திவரும் சிவகாசியை சேர்ந்த பாதிரி கிறிஸ்துதாஸ் என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரி கிறிஸ்துதாசை கைது செய்தனர்.