மோடியின் நலம் வேண்டி பிரார்த்தனை

இரண்டு நாட்களுக்கு முன் பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வன்முறையாளர்கள் அவரது வாகனத்தை மறித்தது, அவர்களுக்கு பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசும் காவல்துறையும் ஆதரவாக செயல்பட்டது உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக அசாம் முதல்வர் கவுஹாத்தியில் உள்ள உக்ரதாரா கோயிலில் ‘ருத்ர யாகம்’ நடத்தினார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற ஜோதி பேரணியில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.கவினரும் பொதுமக்களும் பிரதமர் மோடியின் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பஞ்சாப் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் எதிர்த்து போராட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன.