பழமையான சாரதா தேவி கோயிலில் பூஜை

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள டீட்வாலில் புதிதாக கட்டியெழுப்பப்பட்ட சாரதாதேவி கோயில் திறக்கப்பட்டது. அங்கு தற்போது பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள சாரதா தேவி கோயிலுக்கு ஒரு பாரதத் தம்பதியினர் சென்று பூஜை செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிற வெங்கட்ராமன் மற்றும் சுஜாதா வெங்கட்ராமன் தம்பதியினர், பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று சாரதா தேவி கோயில் அமைந்துள்ள படீக (Pateeka) சென்று அங்கு பூஜை செய்தனர்.