தடை செய்ய மனு

நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குன்னுர் ஆகிய பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாவை காரணம் காட்டி, நள்ளிரவு நேரங்களில் மேளதாளத்துடன் முக்கிய வீதிகளில் பாட்டுப் பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு கிறிஸ்தவர்கள் இடையூறு செய்கின்றனர். அதுமட்டுமின்றி ஆங்காங்கே குடில்கள் அமைத்து மதம் மாற்ற முயற்சியும் நடக்கிறது. ஆகவே இதை கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதை தடை செய்ய வேண்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அப்பகுதி இந்துமுன்னணி அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.