கணவருடன் வாழ அனுமதி

உத்தர பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்த 23 வயதான ஒரு முஸ்லிம் பெண், ஹிந்துவாக மாறி தன் காதலனை திருமணம் செய்துள்ளார். இதனால், தன் பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்தது. அந்த பெண், ஹிந்துவாக மாறி, காதல் கணவருடன் பிரயாக்ராஜில் வசிப்பதாக காவலர்களிடம் கூறியுள்ளார். இது குறித்த சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அந்த பெண், தான் தன்னுடைய கணவருடன் வாழ விரும்புவதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் கூறினார். எனவே, அவர் தனது கணவருடன் சேர்ந்து வாழ, அந்த பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.