தேசிய கொடியை அகற்றிய பி.டி.பி

மெகபூபா முப்தி தலைமையிலான பி.டி.பி கட்சியினர், ஜம்மு காஷ்மீர் மா நிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கோட்ரங்கா பகுதியில் உள்ள ‘டாக் பங்களா’ என்ற அரசு கட்டிடத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றி தங்கள் கட்சிக்கொடியை கட்டி தேசியக் கொடியை அவமதித்தனர். அவர்கள் மீது ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அந்த பங்களாவில் தங்கவந்த மெஹபூபா முப்தியிடம் இது குறித்து கேட்டபோது, தனக்கு தெரியாது என்று கூறி தனது கட்சி நிர்வாகிகளை குறித்து கருத்து தெரிவிக்கவோ கண்டிக்கவோ மறுத்துவிட்டார்.