பஞ்சாயத்து தலைவர் கைது

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மேதினிபூரில் உள்ள கலுன்கரா கிராம பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளவர் அவிஜித் மொண்டல். இக்ராமத்தில் வசிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி, பாத்திரங்கள் கழுவுவதற்காக குளத்துக்குச் சென்றபோது, ​​ அவிஜித் மொண்டல் அந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அடுத்த நாள் மிட்னாபூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மொண்டலை கைது செய்து மிட்னாபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சில நாட்களுக்கு முன் இதே மேற்கு வங்கத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதி பஞ்சாயத்துத் தலைவரின் மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 9ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இது காதல் விவகாரம் என அம்மா நில முதல்வர் மமதா பானர்ஜி கொச்சைபடுத்தி பேசினார் என்பது நினைவு கூரத்தக்கது.