பாகிஸ்தான் உளவாளி கைது

எல்லை பாதுகாப்பு படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியை சேர்ந்த முஹமது சஜ்ஜாத் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்தான். இவன் பாகிஸ்தானுடை ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பிற்கு உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளான். சில ரகசிய ஆவணங்களை ஐ.எஸ்.ஐ அமைப்பினரிடம் கொடுக்கும் போது குஜராத் மாநிலம் காந்திநகரில் கைது செய்யப்பட்டான். இவன் எல்லை பாதுகாப்பு படையில் இணைவதற்கு முன்பாக பாகிஸ்தான் சென்றதும் அங்கு 46 நாட்கள் தங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.