ட்ரோனில் ஆயுதங்கள் கடத்தும் பாகிஸ்தான்

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும்  கடத்த சமீப காலமாக பாகிஸ்தான், ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த மே 14ல், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, 9 மி.மீ கைத்துப்பாக்கி, 15 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட்து. எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அதனை சுட்டு வீழ்த்தி கைப்பற்றினர். சுமார் ஒரு மாதம் கழித்து நேற்று மீண்டும் இதே போன்றதொரு முயற்சி நடைபெற்றுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்த முயன்றபோது அது பாகிஸ்தான் பகுதிக்கே மீண்டும் திரும்ப சென்றது. இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.