பா.ம.க கடிதம்

நடிகர் சூர்யா நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ இம்மாதம் 10 தேதி திரையிடப்பட உள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என கோரி கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பா.ம.கவினர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை ஜாதி வெறி பிடித்தவர்கள் போலவும், வன்முறையாளர்கள் போலவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருளர் வன்னிய சமுதாய மக்களிடையே ஜாதி வன்மத்தைத் தூண்டும் விதமாக அத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்புக் கேட்காதவரை திரையரங்குகளில் அவரின் படங்களை திரையிடக்கூடாது’ என பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.