குடும்பத்திற்கு நமது ஆதரவு

கேரளாவின் பாலக்காட்டில் சனிக்கிழமையன்று ஒரு கொடூரமான தாக்குதலில், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) முன்னாள் பிரசாரகர் மற்றும் முன்னாள் ஷாரீரிக் சிக்ஷன் பிரமுக் ஸ்ரீனிவாசன், முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஸ்ரீனிவாசனுக்கு கோபிகா என்ற மனைவியும், நிவேதிதா என்ற மகளும் உள்ளனர். பாலக்காட்டில் உள்ள ஸ்ரீனிவாசனின் கடையான எஸ்.கே.எஸ் ஆட்டோவிற்குள், சென்ற ஐந்து பயங்கரவாதிகள், ஸ்ரீனிவாசனை வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இருபதுக்கும் மேற்பட்ட முறை கொடூரமாகத் தாக்கியது. பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை கருக்கொடி மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இல்லத்திற்கு சென்ற ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் ஸ்ரீனிவாசனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பாலக்காட்டில் உள்ள ஸ்வயம்சேவகர்கள் ஸ்ரீனிவாசனின் குடும்பத்திற்கு உதவ சில தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஸ்ரீனிவாசனின் குடும்பத்திற்கு உதவும் வகையில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பாலக்காடு விபாக் சங்கசாலக் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கி கணக்கு விவரங்கள்: Gopika S Account No: 33499214908 State Bank Of India, Mercy College Palakkad Branch IFSC: SBIN0009157 Google Pay: 8089498338