அனாதை குழந்தை துஷ்பிரயோகம்

உத்தரப் பிரதேசத்தில் தாயை இழந்த ஒரு அனாதை சிறுவனை வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக, சுல்பிகர், உமர், மிதிலேஷ், சோனி, பாப்லி, ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிந்துவான அந்த 9 வயது சிறுவன் உடல்ரீதியாக தாக்கப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு முஸ்லிம் தம்பதிக்கு விற்கப்பட்டான். அந்த குழந்தையை தத்தெடுத்த தம்பதியினர் சிறுவனை துஷ்பிரயோகம் செய்து வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதாக டுவிட்டர் பயனர் ஒருவர் வீடியோவை வெளியிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து தகவல் அறிந்த காசியாபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுவன் ஒரு முஸ்லீம் தம்பதிக்கு விற்கப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர், சோனி, பாப்லி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடும் பணி முடிக்கிவிடப்பட்டு உள்ளது.