ஹிந்துக்கள் மயானம் ஆக்கிரமிப்பு

திருப்பூர் மங்கலம் ஏ.பி.டி ரோடு பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மிகப்பழமையான ஹிந்துக்கள் பயன்படுத்தும் மயானம் இருந்தது. தமிழக அரசுகளால் சாலை விரிவாக்கத்திற்காக மயானம் சுருக்கப்பட்டு, தற்போது ஒரு ஏக்கருக்கும் குறைவான இடமே உள்ளது. தற்போது இதில் கிறிஸ்தவர்கள் ஒரு பகுதியில் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர். இதன் மூலம், ஹிந்து மயானத்தை ஆக்கிரமித்து மதக் கலவரத்தை தூண்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.