கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

புதுச்சேரியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை சில மர்மநபர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் புதுவை பிரதேச விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ண ஆச்சாரியுடன் இணைந்து புதுச்சேரி இந்து முன்னணி மாநில தலைவர் சனில் குமார் தலைமையில் இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.