தொழில்நுட்பத்தை பகிரும் அணுசக்தி மையம்

கொரோனா தொடர்பான சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும் வழங்கி, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாபா அணுசக்தி மையம் தேசத்திற்கு துணை நிற்கின்றன. பி.பி.இ கவச உடைகளை கோபால்ட் மூலம் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம், ஹெபா பில்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்-95 முகக்கவசத்தை விட சிறந்த என்-99 முககவசங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பாபா அணுசக்தி மையம் பிற நிறுவனங்களுக்கு பகிர்ந்துள்ளது. இந்த மையம், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கான உதிரி பாகங்கள், ஸ்பிரேட்டர், ரீபர், மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான சிறிய அளவிலான பிளாஸ்மா தொற்று நீக்கக் கருவி மற்றும் பிளாஸ்மா எரியூட்டும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஏற்கனவே வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. கொரோனா மரபணு பாதிப்பு கண்காணிப்பு ஆய்வை டாடா நினைவு மருத்துவமனையுடன் இணைந்து மேற்கொள்வதாகவும், இது உலகில் நடைபெறும் தனித்துவமான ஆய்வு என்றும் இதன் முடிவுகள் விரைவில் உலக விஞ்ஞானிகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது என்றும் பாபா அணுசக்தி மையம் தெரிவித்துள்ளது.