கோயில் விடுதியில் அசைவ உணவு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயில் உலக புகழ் பெற்றது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோயில் அதிகாரிகள் அசைவ உணவு சாப்பிட்ட சம்பவம் ஹிந்து பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டது. இதுபோன்ற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும், ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். செவி சாய்க்குமா தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை?