நாடு கடத்தப்படுகிறார் நிரவ் மோடி

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியின் மீதான விசாரணை தீவிரமடைந்ததால், அவர் கடந்த 2018ல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐயின் வேண்டுகோளின்படி, அங்கு கைது செய்யப்பட்ட நிரவ் மோடி வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் நிரவ் மோடியை நாடு கடத்தும் பணியை அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.